இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் அஹமதிநிஜாத்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதிநிஜாத் வரும் 28ம் தேதி இந்தியா வருகிறார்.
இலங்கை செல்லும் அவர் வழியில் இந்தியா வருகிறார். இத் தகவலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா கிடுக்கிப்பிடி போட்டு வரும் நிலையில் அஹமதிநிஜாதின் இந்த வருகை முக்கியத்துவம் பெறுகிறது.
நாராயணன் நிருபர்களிடம் கூறுகையில், யுரேனியம் தயாரிப்பு விஷயத்தில் ஈரானை தூதரகரீதியில் கையாளுவது தான் நல்லது. (அமெரிக்கா) வேறு வகையில் செயல்பட்டால் (போர் தொடுப்பது) உலக நாடுகள் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும் என்றார்.












Click it and Unblock the Notifications