இலங்கை-குண்டு வீச்சில் தமிழ் இளைஞர் பலி
கிளிநொச்சி: முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படை நடத்திய குண்டு வீச்சில் ஒரு அப்பாவி தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார். 2 சிறார்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.
முல்லைத் தீவு நகரையொட்டியுள்ள கடலோரப் பகுதிகளில் இலங்கை விமானப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தின. இதில் அம்பலவான்போக்கனை என்ற இடத்தைச் சேர்ந்த உகந்தன் (18) எனும் தமிழ் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லக்ஷனா (5), கிருஷாலினி (8), கனிஷ்டன் (17), தியாகராஜா (48), சுதாகரன் (22), ஜீவரத்னம் (65), அந்தோணி ஜெரால்டு (42), சத்தியநாதன் (42) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதே பகுதியில் உள்ள வன்னாங்குளம் சுனாமி நினைவிடம் அருகே மேலும் 2 முறை குண்டு வீசி விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் யாரும் காயமடையவில்லை.
இருப்பினும் மீனவர்களின் படகுகள், மீன் பிடி சாதனங்கள் அழிக்கப்பட்டன.
இதேபோல வன்னேரி அருகே உள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் வந்த லாரியை இலங்கை ராணுவத்தின் ஆழ் ஊடுறுவும் பிரிவினர் கண்ணிவெடி வைத்துத் தகர்த்தனர். இதில் லாரி டிரைவர் எழில்மேகவர்மன், கிளீனர் தர்மஜெயந்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications