வெளிநாட்டு தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளுக்கு ஆபத்தில்லை-ஆய்வு
துபாய்: வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் மிரட்டலாக இருக்க மாட்டார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல் துறை தலைவர் தானி கல்பான் தமீம் ஏப்ரல் 16ம் தேதி அபுதாபியில் நடந்த தேதிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பேசுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டினரால் எதிர்காலத்தில் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால் அரேபியன்பிசினஸ்.காம் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தவறு என்று தெரிய வந்துள்ளது.
இந்த இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 58 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்துக்கு மறுப்புதெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வளைகுடா நாடுகளின் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.
14 சதவீதம் பேர் மட்டுமே வெளிநாட்டினரால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 40 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். கத்தாரில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications