வெளிநாட்டு தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளுக்கு ஆபத்தில்லை-ஆய்வு
துபாய்: வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு இந்தியத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் மிரட்டலாக இருக்க மாட்டார்கள் என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் காவல் துறை தலைவர் தானி கல்பான் தமீம் ஏப்ரல் 16ம் தேதி அபுதாபியில் நடந்த தேதிய பாதுகாப்பு குறித்த மாநாட்டில் பேசுகையில், வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டினரால் எதிர்காலத்தில் பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால் அரேபியன்பிசினஸ்.காம் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் இது தவறு என்று தெரிய வந்துள்ளது.
இந்த இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 58 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
20 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்துக்கு மறுப்புதெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வளைகுடா நாடுகளின் கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தியுள்ளனர்.
14 சதவீதம் பேர் மட்டுமே வெளிநாட்டினரால் வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மட்டும் 40 சதவீதம் பேர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். கத்தாரில் 80 சதவீதம் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications