ராமர் பாதம் ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம்: உயர் நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராமர் பாதம் அமைந்துள்ள இடம், ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

ராமேஸ்வத்தை சேர்ந்த ராமசந்திரன், ஜோஷி, ராமநாதன், உதயகுமார் ஆகியோர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், ராமேஸ்வரத்தில் ராமரின் பாதம் பதிந்த இடத்தில், 500 ஆண்டுகளுக்கு முன்பு எங்களது மூதாதையாரான நீலகண்ட ஐயர் பீடம் அமைத்து கோவில் கட்டினார்.

அவரே கோவில் பூசாரியாகவும் தர்மகர்த்தாவாகவும் இருந்தர். அவருக்கு பிறகு அவரது வாரிகளான நாங்கள் தான் அந்த கோவிலை நிர்வகித்து வருகிறேம்.

இந்த நிலையில் ராமர்பாதம் ஒரு பொது வழி பாட்டு ஸ்தலம் என்றும், கோவிலில் நீலகண்ட ஐயர் வாரிகளுக்கு பூசை செய்ய மட்டுமே உரிமை உண்டு என்றும் அவர்களுக்கு அறங்காவலர் உரிமை இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதை எதிர்த்து நாங்கள் சார்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே கீழ் நீதி மன்றம் தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், ராமர் பாதம் அமைந்துள்ள இடம், ராமநாதசுவாமி கோவிலுக்கே சொந்தம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், ராமர் பாதம் அமைந்துள்ள இடம் ராமநாத சுவாமி கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஒரு இடத்துக்கு உரிமை கோருபவர்கள் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்று நீருபிக்க வேண்டும்.

மனுதார் கூறியுள்ள சில வழக்குகள் பூசாரி உரிமைக்கு மட்டும் பொறுந்தக்கூடியது. எனவே இந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+