Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரன் சுந்தரலிங்கனார் படம் அவமதிப்பு-நெல்லையில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்ட கிராமம் ஒன்றில் புதிய தமிழகம் கட்சி கொடி கம்பம் வெட்டி சாய்க்கப்பட்டது. வீரன் சுந்தரலிங்கனார் படமும் அவமதிப்பு செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளை சீவலப்பேரி அருகே உள்ளது நொச்சிகுளம். இந்த ஊரை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், அருகில் உள்ள தோணித்துறையை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நொச்சிகுளத்தில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு புதிய தமிழகம் கொடி கம்பம் நடப்பட்டு கொடியேற்றப்பட்டது.

நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர் அந்த கொடி சம்பத்தை வெட்டி சாய்த்தனர். அப்பகுதியிலுள்ள டியூப் லைட்டையும் அடித்து நொருக்கி விட்டு தப்பிச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரன் சுந்தரலிங்கனார் படமும் அவமதிப்பு செய்யப்பட்டது.

காலையில் இதைப்பார்த்த நொச்சிகுள கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதை கண்டித்து புதிய தமிழகம் இளைஞரணி வட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமத்தினர் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

தகவல் அறிந்த ஏடிஎஸ்பி வேணுகோபால், தழையூத்து இன்ஸ்பெக்டர் மகாதேவன், எஸ்ஐ அதிசயராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் அதே இடத்தில் மீண்டும் புதிய கொடி கம்பம் நட்டு கொடியேற்றினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+