For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேலும் 100 சமத்துவபுரங்கள் அமைக்க திட்டம்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: தமிழகத்தில் புதிதாக கட்டப்பட உள்ள சமத்துவபுரங்களுக்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந் நிலையில் தற்போது மீண்டும் புதிய சமத்துபுரங்கள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 100 புதிய சமத்துவபுரங்கள் அமைக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் முதல் கட்டமாக சமத்துவபுரங்களுக்கு இடம் தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகங்ளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் தார் சாலை, தெரு விளக்கு, குடிநீர் மேல் நிலைத் தொட்டி, ரேஷன் கடை, விளையாட்டு மைதானம் மற்றும் பெரியார் சிலையை நிறுவ வேண்டும் என்று அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X