திசையன்விளை மணல் ஆலை விபத்தில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை அருகே ஒரு மணல் சுத்திகரிப்பு ஆலையில் நடந்த இருவேறு விபத்துகளில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
திசையன்விளை அருகே உள்ள குட்டத்தில் ஒரு தனியார் கார்னேட் மணல் ஆலை உள்ளது. இதில் வெள்ளங்குழியை சேர்ந்த செல்வகுமார் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ஆலைக்கு சொந்தமான சர்வீஸ் ஸ்டேஷன் அருகே நின்ற போது பின்நோக்கி வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இதே ஆலையில் மணல் சுத்தகரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது கன்வெயர் பெல்ட் தாக்கி குட்டம் தஞ்சபுரம் தெரு பாப்பாத்தி படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.












Click it and Unblock the Notifications