For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாமியாரை கத்தியால் குத்திய மருமகன் கைது

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: மாமியாரை கத்தியால் குத்திய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், துறையூருக்கு அருகில் உள்ள தம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சுசீலா. கடந்த ஒரு வருடமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு தாய் பவுனு வீட்டில் இருந்தார் சுசீலா. இந்நிலையில் சுசீலா நேற்று திடீரென இறந்தார். இதனால் சுசிலாவின் பெற்றோர் கதறி அழுதனர்.

தகவலறிந்த பாலகிருஷ்ணன் மனைவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும் மாமியார் பவுனுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் பவுனை கத்தியால் குத்தினார்.

இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய பவுனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரிகிறது. இது தொடர்பாக பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X