முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க முடிவு

பாகிஸ்தானில் சர்தாரி மற்றும் ஷெரீப் கட்சிகள் கூட்டணியாக ஆட்சி அமைத்துள்ளன. சர்தாரி கட்சியைச் சே
சேர்ந்த கிலானி பிரதமராக உள்ளார்.
ஆட்சி அமைப்பதற்கு முன்பே முஷாரப்பை தூக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் ஷெரீப். இருப்பினும் அப்போது அதற்கு பிரேக் போட்டார் சர்தாரி.
மேலும், நாடாளுமன்றம் மூலம் முஷாரப்பை பதவியிலிருந்து அகற்றுவது குறித்தும் நிதானமாகத்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முஷாரப்பின் அதிகாரங்களைப் பறிக்க சர்தாரியும், ஷெரீப்பும் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விரைவில் அரசியல் சாசனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதன் மூலம் அதிபர் பதவி வெறும் அலங்காரப் பதவியாக மாற்றப்படும். பிரதமருக்கே அதிக அதிகாரம் இருக்கும்.
முஷாரப்பை தானாகவே பதவி விலக வைக்கும் உத்தியாக இது கருதப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம் வந்தால் முஷாரப் நிச்சயம் ரப்பர் ஸ்டாம்ப் அதிபராக நீடிக்க விரும்ப மாட்டார், பதவி விலகி விடுவார் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications