கொடநாடு 'கேட்': சப் கலெக்டர் உத்தரவு செல்லாது - உயர்நீதிமன்றம்
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் போடப்பட்டுள்ள கேட்டை அகற்ற சப் கலெக்டர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமானதாக கருதப்படும் கொடநாடு எஸ்டேட் செல்லும் பாதையை, அப்பகுதியில் உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட சில பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென அந்தப் பாதையை மறித்து கொடநாடு எஸ்டேட் நிர்வாகம், கேட் போட்டு விட்டது. இதையடுத்து கொடநாடு ஊராட்சி சார்பில் குன்னூர் சப் கலெக்டரிடம் புகார் தரப்பட்டது.
இப்புகாரை விசாரித்த சப் கலெக்டர், கேட்டை அகற்றுமாறு கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து எஸ்டேட் மேலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு இன்று, சப் கலெக்டரின் உத்தரவு செல்லாது என்று உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் வருவாய்த்துறையினர் உரிய நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை என்று கூறிய அவர் சப் கலெக்டரின் உத்தரவை ரத்து செய்தார்.
அதேசமயம், பொதுமக்களின் நலன் கருதி, கேட்டை அகற்றி, அப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்த கொடநாடு எஸ்டேட் அனுமதிக்கலாம் என்றும் ஆலோனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications