ஆண்டித்தேவர் மகன் கொலை: இன்னொரு மகனுக்கு நார்கோ டெஸ்ட்!
மதுரை: முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டித்தேவர் மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஆண்டித்தேவர். இவரது மகன் சிவராமன் கடந்த 1998 ம் ஆண்டு திடீரென காணாமல் போனார்.
இவரை கடத்தி கொலை செய்ததாக அவரது மற்றொரு மகன் பன்னீர் செல்வம், உறவினர்கள் பெரிய கருப்பன், பஞ்ஜராஜன், நல்லுதேவர் ஆகிேயாரை சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் அருளானந்தம் கைது செய்தார்.
தற்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்கள் ஜாமினில் வெளியே உள்ளனர்.
இந்த நிலையில், கொலை வழக்கில் ஆண்டித்தேவரின் மகன் பன்னீர் செல்வத்திற்கு முக்கிய பங்கு உள்ளதாக, சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பன்னீர் செல்வத்திடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி தர வேண்டும் எனவும் கோரபப்ட்டது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி சாத்தப்பிள்ளை அதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து பன்னீர் செல்வத்திடம் நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications