அமெரிக்காவில் சென்னை சாப்ட்வேர் என்ஜினியர் தற்கொலை
நியூயார்க்: நியூஜெர்சியில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் வேலை பறிபோனதால் மன நிலை பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணேஷ் சந்தான கிருஷ்ணன் (27) என்ற அந்த பொறியாளர் தபன் சீ பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த 3ம் தேதி இச் சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இது குறித்து நேற்று முன் தினம் தான் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் இருந்து தகவல் வந்துள்ளது.
2005ம் ஆண்டு அமெரிக்கா வந்த சந்தான கிருஷ்ணன் தனது பி.எச்டியை முடித்துவிட்டு போஸ்ட் டாக்டோரல் உயர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஆனால், இவருக்கு திடீரென உதவித் தொகை நின்றுபோனதால் ஆராய்ச்சிப் படிப்பை தொடர முடியவில்லை.
இதையடுத்து நியூஜெர்சியில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். வெஸ்ட்செஸ்டர் கவுன்டியில் உள்ள உசிநிங் பகுதியில் அல்பேனி போஸ்ட் சாலையில் ஒரு அடு்க்குமாடி குடியிருப்பில் தனியே வசித்து வந்தார்.
இந் நிலையில் வேலையும் போனதையடுத்து இவர் மன நிலை பாதிக்கப்பட்டார். இதையடுத்து சாலைகளில் போகும் கார்களை விரட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
இந் நிலையில் வீட்டு வாடகை கட்ட முடியாமல் அங்கிருந்தும் காலி செய்யப்பட்டார். இதனால் ஒரு வீட்டில் ஷெட்டில் தூங்கி வந்துள்ளார். இந் நிலையில் ஷெட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக கடந்த மார்ச் 11ம் தேதி இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மன நிலை பாதிக்கப்பட்டது தெரியவந்ததால் மன நல சிகிச்சைகாக வெஸ்ட்செஸ்டர் மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை தரப்பட்டு டிஸ்சார்ஜ் ஆன இவர் வெளியே வந்தவுடன் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வேலையில்லாமல் சிரமமப்பட்ட இவரை ஊருக்குத் திரும்பி வந்துவிடுமாறு குடும்பத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதை சந்தான கிருஷ்ணன் விரும்பவி்ல்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் இவரது சகோதரி பணி நிமித்தமாக அமெரிக்கா சென்றபோது தான் சந்தான கிருஷ்ணன் தெருவில் வசிப்பது தெரியவந்துள்ளது.
-
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்!












Click it and Unblock the Notifications