கர்நாடகம்-தேர்தலை புறக்கணிக்கு கொடவா சமூகத்தினர்
மடிகேரி: கர்நாடக சட்டசபைத் தேர்தலை கொடவா சமூகத்தினர் புறக்கணிக்க வேண்டும் என கொடவா தேசிய கவுன்சில் தலைவர் என்.யு. நாச்சப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து தெற்கு குடகு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமங்களா என்ற இடத்தில் நடந்த விழிப்புணர்வுக் கூட்டத்தில் நாச்சப்பா பேசுகையில், கொடவா பகுதியில் ஒருவர் கூட ஒட்டுப் போடக் கூடாது. குடகு பிரதேசத்திலிருந்து ஒருவர் கூட தேர்ந்தெடுக்கப்படக் கூடாது.
கடந்த 2004ம் ஆண்டு நாம் தேர்தலைப் புறக்கணித்ததால் ஒட்டுப் பதிவு சதவீதம் 7 சதவீதம் குறைந்தது.
கொடவா மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நாம் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு பிரதேசத்தில் கொடவா சமூகத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். இப்பிரதேசத்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications