For Daily Alerts
Just In
வன்முறைப் பேச்சு-திருமாவளவனுக்கு பிடிவாரன்ட்
சிதம்பரம்: வன்முறையைத் தூண்டியதாக பேசிய வழக்கில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனுக்கு சிதம்பரம் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி, கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள குமாரக்குடி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததாக கூறி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிதம்பரம் துணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. வழக்கு விசாரணையில் திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் திருமாவளவன் வரவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் பிரகாசன் உத்தரவிட்டார்.
Comments
Story first published: Tuesday, April 29, 2008, 10:06 [IST]