For Daily Alerts
Just In
சீனாவில் பயணிகள் ரயில் மோதி விபத்து-70 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் ரயில் தடம் புரண்டு மற்றொரு பயணிகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 70 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 416 பேர் படுகாயமடைந்தனர்.தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து குயின்போ நகருக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அதேபோல ஷாண்டாங் மாகாணம் யாங்டாய் நகரில் இருந்து ஜூஹூ நோக்கி மற்றொரு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குயின்போ நோக்கிச் சென்ற ரயில் திடீரென தடம் புரண்டு, ஜூஹூ நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது. இந்த கோர விபத்தில் 70 பேர் பரிதாபமாக பலியாயினர். படுகாயமடைந்த 416 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Tuesday, April 29, 2008, 11:07 [IST]