திருவிழாவுக்குச் சென்ற வேன் டிரைவர் வெட்டி கொலை
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே கோயில் திருவிழாவில் வேன் டிரைவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள பிரம்ம தேசத்தை சேர்ந்த வேன் டிரைவர் ஆறுமுகம். பாப்பாக்குடி அருகே உள்ள அடைச்சாணி அளிப்பாச்சி சுடலை மாடசாமி கோயில் கொடை விழாவுக்கு ஆறுமுகம் நேற்று இரவு சென்றார்.
கோயிலில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்திடம் பிரம்மதேசத்தை சேர்ந்த 3 பேர் தகராறு செய்தனர். திடீரென்று ஆறுமுகத்தை சுற்றி வளைத்து தாக்கினர்.
அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக ஆறுமுகம் திருவிழாக் கூட்டத்துக்குள் ஓடினார். ஆனால் அந்த கும்பல் தொடர்ந்து விரட்டிச் சென்றது. கருணை ஆறு அருகே ஆறுமுகத்தை ஓட ஓட அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் கதறி துடித்தார். இதை பார்த்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். போலீசாரை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆறுமுகத்தை மீட்டு அம்பை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications