முதல்வருக்கு கருப்புக்கொடி-சேதுராமனுக்கு ஜாமீன்
மதுரை: முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றபோது கைது செய்யப்பட்ட மூமுக தலைவர் டாக்டர் சேதுராமனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை வமதிக்கப்பட்டதை கண்டித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன் உண்ணாவிரதம் இருக்க முயன்றபோது கைதாகி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் மதுரையில் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்டப்படும் என டாக்டர் சேதுராமன் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சேதுராமன் உள்பட 142 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
தனக்கு ஜாமீன் வழங்க கோரி டாக்டர் சேதுராமன் மதுரை மேலூர் ஜூடிசியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த மாஜிஸ்திரேட் வெங்கடேசன் (பொறுப்பு) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து டாக்டர் சேதுராமன் விடுதலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications