அம்பேத்கார் சிலை அவமதிப்பு-கும்பகோணத்தில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கும்பகோணத்தில் டாக்டர் அம்பேத்கார் சிலையை சில விஷமிகள் அவமதிப்பு செய்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தின் தலைமை அலுவலகம் முன் அம்பேத்கரின் மார்பளவு சிலை உள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத சில விஷமிகள் அந்த சிலையை அவமதிப்பு செய்துவிட்டு தப்பினர்.

நள்ளிரவில் இதை பார்த்த அப்பகுதியினர் அதிரச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.எஸ்பி சீனிவாசன், திருவிடைமருதூர் டிஸ்பி ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிலையை அவமதித்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என்று கூறி மறியல் செய்ய முயன்றனர்.

போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அங்கு பதட்டம் நிலவுகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+