3 கப்பல்களில் ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ள விடுதலைப் புலிகள்

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் நாளுக்கு நாள் திகிலூட்டும் வகையில் அதிகரித்து வருகிறது. இரு தரப்பும் கடுமையாக மோதி வருகின்றன. உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பல்வேறு நாடுகளிலும் ஆயுத உதவியைக் கோரி வருகிறது இலங்கை. இந்தியாவிடமும் ஆயுதங்களைக் கேட்டது. ஆனால் பகிரங்கமாக ஆயுத உதவியை செய்ய முடியாத நிலையில் இந்திய அரசு உள்ளது. இருப்பினும் தொழில்நுட்ப உதவிகளையும், ரேடார் உள்ளிட்ட உதவிகளையும் அது செய்து வருகிறது. மேலும் இலங்கை ஆயுதங்கள் வாங்க நிதியுதவியையும் அது செய்யவுள்ளது.
இலங்கைக்குப் பதிலடியாக விடுதலைப் புலிகளும் சத்தம் போடாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்து வருகின்றனர். சமீபத்தில் 3 கப்பல்கள் நிறைய விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பிலிருந்து வெளியாகும் லக்பிமா என்ற இதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வெளிஓயா, வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் புலிகள் நடத்தி வரும் தாக்குதல்களில் அவர்களுக்கு கணிசமான வெற்றி கிடைத்துள்ளதற்கு, புதிதாக வாங்கியுள்ள அதி நவீன ஆயுதங்கள்தான் காரணம் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்து விட்டதாக இலங்கை தெரிவித்தது. ஆனால் புலிகள் வசம் அதி நவீன இறக்குமதி ஆயுதங்கள் வந்திருப்பதாக தற்போது வெளியாகியுள்ள தகவல் மூலம், இலங்கை அரசின் முந்தையத் தகவல் பொய்யானதாக இருக்கக் கூடும் என்று உறுதியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் மூன்று கப்பல்களில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை புலிகள் இறக்குமதி செய்திருப்பதாக உளவு அமைப்பை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் இரண்டு கப்பல்களில் ஆயுதங்கள் வந்தன என்றும், கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி ஒரு கப்பலில் ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும் இலங்கை உளவு அமைப்பு கூறியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications