ரயிலில் சீட் கேட்டு தகராறு-3 எம்எல்ஏக்கள் மீது வழக்கு
நாகர்கோவில்: ரயிலில் சீட் ஒதுக்கீடு கேட்டு ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த 3 எம்எல்ஏக்கள் மீது ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து சென்னையில் செல்வதற்காக கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் எம்எல்ஏக்கள் ராஜன், ஜெயபால், ஜான் ஜேக்கப், முன்பதிவு செய்திருந்தனர்.
காத்திருப்போர் பட்டியலில் இவர்களின் பெயர் இருந்தததால் எமர்ஜென்சி கோட்டாவுக்கு விண்ணிப்பித்தனர். சீட் ஒதுக்கப்படாததால் ஆத்திரமடைந்த எம்எல்ஏக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் எசி வகுப்பு பெட்டியில் எம்எல்ஏக்களுக்கு சீட் ஒதுக்கித்தரப்பட்டது. இதனால் இந்த ரயில் 45 நிமிடம் தாமதமாக சென்றது.
இதுதொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின்பேரில் எம்எல்ஏக்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.