டாஸ்மாக் பணியாளர்கள் கோட்டை முன் மறியல்
Subscribe to Oneindia Tamil
மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முன் வரும் 8ம் தேதி மறியல் செய்யப்போவதாக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தங்களுக்கு பணி நிரந்தரம், 8 மணி நேர பணி, வார விடுப்பு, கவுன்சிலிங் முறையில் பணி மாறுதல், நியாயமான ஊக்கத் தொகை, பார் உரிமையாளர்களிடம் இருந்து உரிய பாதுகாப்பு போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை தமிழ அரசிடம் முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தங்கள் பிரச்னையில் தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக டாஸ்மாக் பணியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில துணைத் தலைவர் சரவணன் தலைமையில் திண்டுக்கல்லில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை கோட்டை முன் மே 8ம் தேதி மறியல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications