பொன்முடியின் 'ஓரஞ்சி அஞ்சு'!
சென்னை: சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஐந்தாம் வாய்ப்பாட்டை தலைகீழாக ஒப்பித்து கலகலப்பை ஏற்படுத்தினார்.
சட்டசபையில் அமைச்சர் பொன்முடி நேற்று பேசுகையில், அக்காலத்தில் எல்லாம் நான், என் தாத்தாவிடம், வாய்ப்பாட்டை படு வேகமாக சொல்வேன். இப்போதும் கூட சொல்ல முடியும் என்று கூறி விட்டு ஐந்தாம் வாய்ப்பாட்டை சொல்ல ஆரம்பித்தார்.
ஓரஞ்சி அஞ்சு என்று ஆரம்பித்த பொன்முடி முழுமையாக சொல்லி முடித்தார். பின்னர் தலைகீழாகவும் சொல்ல ஆரம்பித்தார். இதைப் பார்த்து சபையில் கலகலப்பும், வியப்பும் ஏற்பட்டது.
பின்னர் பொன்முடி பேசுகையில், இக்காலத்தில் எல்லாம் பிள்ளைகள் ஏதாவது ஒரு பெருக்கல் கணக்கைச் சொன்னால் கூட கால்குலேட்டரைத் தேடுகிறார்கள் என்றார்.
முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் பொன்முடியின் வாய்ப்பாடு வேகத்தைப் பார்த்து சிரித்து ரசித்தனர். ஆனால் வாய்ப்பாட்டை முடித்த பின்னர் பொன்முடி, இது சொல்வதற்கு எளிது. அதனால்தான் 5ம் வாய்ப்பாட்டைக் கூறினேன் என்று கூறி சபையின் சிரிப்பொலியை பெற்றார்.












Click it and Unblock the Notifications