ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை-அன்புமணி
டெல்லி: டாக்டர் வேணுகோபால் வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பால் எனக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
டாக்டர் வேணுகோபாலை பதவி நீக்கம் செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.
இதையடுத்து அன்புமணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவரை பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் அன்புமணி கருத்து தெரிவிக்கையில், இது எனக்குப் பின்னடைவு அல்ல. சட்டத் திருத்தம் எனது தனிப்பட்ட முடிவு அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் இது. இதை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோருவது வேடிக்கையாக உள்ளது. நான் ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை.
தீர்ப்பின் முழு விவரமும் கிடைத்த பிறகே அதுகுறித்து நான் விரிவாக கருத்து ெதரிவிக்க முடியும் என்றார் அன்புமணி.
முன்னதாக உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தை அன்புமணி கூட்டி ஆலோசித்தார். இக்கூட்டத்தில் சுகாதாரத் துறைச் செயலாளர் நரேஷ் தயாளும் கலந்து கொண்டார்.
-
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications