வண்டலூர் உயிரியல் பூங்காவில் 'நைட் சஃபாரி' - அமைச்சர்
சென்னை: சென்னை அருகே உள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ரூ. 256 கோடி செலவில், இரவு நேரங்களில் விலங்குகளைக் காணும் வகையில் 'நைட் சஃபாரி'க்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக மாநில வனத்துறை அமைச்சர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பாமகவைச் சேர்ந்த மூர்த்தி, அதிமுக கொறடா கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சிங்கப்பூரில் உள்ளது போல வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மிருகங்களை சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களிலும் காண்பதற்கு வசதியாக இரவு உலா ரூ.256 கோடி திட்டத்தில் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக இந்த ஆண்டு 5 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் துவங்கியிருக்கிறது. உலகிலேயே இத்தகைய இரவு உலா சிங்கப்பூரில் தான் செயல்படுகிறது. அடுத்தபடியாக வண்டலூர் பூங்காவில் இந்த திட்டம் நிறைவேற உள்ளது.
தற்போது பூங்காவில் தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் இல்லை. கோடை காலங்களில் வாகனங்கள் மூலமாக தேவையான தண்ணீர் சப்ளை செய்து வருகிறது என்றார் அமைச்சர்.












Click it and Unblock the Notifications