For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுடுகுழம்பில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப சாவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே சுடுகுழம்பில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியை அடுத்த கம்பூரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சச்சின் (4). கடந்த 9ம் தேதி சமையல் அறையில் விளையாடிக் கொண்டிருந்த சச்சின் கால் இடறி கொதிக்கும் குழம்பில் விழுந்தான்.

இதில் படுகாயம் அடைந்த சச்சினை மேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் சச்சின் பரிதாபமாக இறந்தான். இதை பார்த்த அவனது பெற்றோர் கதறி அழுதனர். இந்த துயர சம்பவத்தால் கொட்டாம்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X