கருணாவை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப பிரிட்டன் முடிவு
Subscribe to Oneindia Tamil

விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் தொடங்கி செயல்பட்டு வருபவர் கருணா. இவர் லண்டனுக்கு போலி விசா மூலம் வந்ததாகக் கூறி பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அவருக்கு 3 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறை தண்டனை முடிந்து கடந்த 9ம் தேதி கருணா விடுதலையானார். இதையடுத்து அவர் சிறையில் இருந்து காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அவரை விரைவில் இலங்கைக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு முடிவு செய்துள்ளது.
கருணாவின் மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் வசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications