For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியுடன் தகராறு-கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

புளியங்குடி: குடித்துவிட்டு வருவதை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த கண்டக்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புளியங்குடியை அடுத்த சிவகிரி ஆர்சி கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. நெல்லை அரசு போக்குவரத்து கழக கண்டரக்டராக பணியாற்றி வந்தார்.

மாடசாமி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு நடந்து வந்தது.

இந்நிலையில் சம்பவத்தன்று மாடசாமி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதை அவரது மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த மாடசாமி, உடலில் மண்எண்ணெய் ஊற்றி பற்றவைத்தார். அவரது உடல் முழுவதும் தீ பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாடசாமியை பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X