ராஜிநாமா செய்ய வேண்டியது கருணாநிதிதான்-ஜெயலலிதா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெருங்கிய உறவினர் தொடர்புடைய ஊழல் வழக்கை அவருக்கு சாதகமாக கையாளுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் போன் மூலம் கேட்டுக் கொண்டதற்காக சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். சுயமரியாதையுடன் செயல்பட்ட அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது அமைச்சர் தார்மீகப் பொறுப்பேற்று செயல்பட்டுள்ளதைப் பயன்படுத்தி முதல்வர் கருணாநிதி லாபம் அடைய முயல்கிறார். ஆனால் உண்மை வேறானது. கருணாநிதியைப் பொறுத்தவரை பூங்கோதை அவசியம் இல்லாதவர். அவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினரும் அல்ல.
போன் ஒட்டுக் கேட்கப்படும் ஒட்டு மொத்த விவகாரத்துக்கும் முதல்வரின் பதில் என்ன? முதல்வரின் கட்டுப்பாட்டில்தான் உள்துறை உள்ளது. இவரது உத்தரவின்பேரில் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா? அல்லது முதல்வருக்கு தெரியாமலேயே ஒட்டுக் கேட்கப்பட்டதா?
அப்படியானால் முதல்வரின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே இந்த பிரச்னையில் முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த பிரச்னையில் ஆதாரங்களும் சான்றுகளும் கண்முன் தெரியும்போது விசாரணை கமிஷன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்?
அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்திய அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா செய்துள்ளார். காவல் நிலைய லாக்கப்பில் இருந்த ரவுடியை விடுவித்த அமைச்சர் கே.பி.பி.சாமி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தனது மனைவி மற்றும் மகன்களின் சொந்த நிறுவனத்துக்கு சலுகைகள் பெற அதிகாரிகளிடம் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்திய பாலுவின் நிகழ்வில் கருணாநிதியின் தார்மீகப் பொறுப்பு எங்கே போனது?
இதற்கெல்லாம் சரியான பதிலை சொல்ல முடியவில்லை என்றால் அதிகாரத்தில் தொடரும் தார்மீக உரிமையை முதல்வர் இழந்துவிட்டார் என்றே அர்த்தம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
Srirangam: அந்த செவுரு எத்தனை பேர பலி வாங்க போகுதோ? ஜெ. அரசியல் வாழ்வை காலியாக்கிய ‘ஸ்ரீரங்கம் சென்டிமென்ட்’












Click it and Unblock the Notifications