For Daily Alerts
Just In
சிவில் சர்வீஸ் தேர்வு: நெல்லை மாவட்டம் சாதனை!
நெல்லை: யுபிஎஸ்சி எனப்படும் சிவில் சர்வீஸ் தேர்வில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தேர்வு பெற்று புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசின் சிவில் பதவிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வில் தமிழகம் இந்த முறை பெரும் சாதனை படைத்துள்ளது. அதிலும் நெல்லை மாவட்டம் ஒரே நேரத்தில் 3 பேரை ஐஏஎஸ் பதவிக்கு தேர்வு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் முரிப்பன்குளத்தை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் மகன் வெள்ளத்துரை, வாசுதேவநல்லூர் ராமநாதபுரத்தை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் ராமமூர்த்தி, தாழையூத்து பசுங்கிளி என்பவர் மகன் சங்கர்குட்டி ஆகிய 3 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஒரே சமயம் 3 பேர் ஐ.எ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Monday, May 19, 2008, 12:36 [IST]