அமைச்சர் பூங்கோதை ராஜிநாமா ஏற்பு- ஜீதாஜீவனுக்கு பொறுப்பு
Subscribe to Oneindia Tamil

ஊழல் வழக்கில் சிக்கிய தனது உறவினர் மின்வாரியத் துறை பொறியாளர் ஜவஹர் என்பவரை விடுவிக்க நடவடிக்கை எடு்க்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஜிபி உபாத்யாயாவுக்கு அமைச்சர் பூங்கோதை போனில் தொடர்பு கொண்டு பேசிய டேப்பை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாம் வெளியிட்டார்.
இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் பூங்கோதை கடிதம் அளித்தார். இந்நிலையை அந்த கடிதத்தை ஏற்று கவர்னர் பர்னாலாவுக்கு கருணாநிதி அனுப்பினார். இதையடுத்து அவரது ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது.
பூங்கோதைக்கு பதில் புதிய சமூக நலத்துறை அமைச்சராக கீதாஜீவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் வகித்துவந்த கால்நடை துறை, ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications