ரவுடிகள் வேட்டை - ஒரே இரவில் 469 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் நேற்று இரவு நடந்த அதிரடி ரவுடி வேட்டையில், 469 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
சென்னை நகரில் அவ்வப்போது ரவுடிகள் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவும் ரவுடிகள் வேட்டை நடந்தது. அப்போது 469 பேர் கைது செய்யப்பட்டனர். நகர் முழுவதும் நடந்த வாகனச் சோதனைகள், விடுதிகள், லாட்ஜுகள், ஹோட்டல்களில் நடந்த சோதனைகளில் இவர்கள் பிடிபட்டனர்.
கைதானவர்களில் 12 பேர் பழைய குற்றவாளிகள். 2 பேர் பிடிவாரண்ட் தேடப்பட்டு வரும், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள். குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததாக 92 பேர் சிக்கினர்.
இந்த ரவுடிகள் வேட்டை தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications