மாம்பழம் வாங்கியதில் சர்ச்சை - துணை தாசில்தாருக்கு அடி, உதை
நாகப்பட்டனம்: நாகையில் மாம்பழம் வாங்கிய பிரச்சனையில் துணை தாசில்தாரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை அருகே உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப் (53).
இவர் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவர் நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஒரு தள்ளு வண்டியில் விற்கப்பட்டு வந்த மாம்பழங்களை வாங்கியுள்ளார்.
மாம்பழம் வாங்கிய பின்னர், விலையை குறைத்துக் கூறுமாறு பேரம் பேசியுள்ளார். அப்போது வண்டி அருகில் இருந்த இருவர் அப்துல் முத்தலீபிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் உச்ச கட்டத்தை அடைந்த போது அந்த இருவரும் அப்துல் முத்தலீப்பை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து உடனடியாக அவரை நாகை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து முத்தலீப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, துணை தாசில்தாரைத் தாக்கிய செல்வம், கண்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications