தமிழக மதுவிலக்கு ஏடிஜிபி திலகவதி மாற்றம்- 4 போலீசார் சஸ்பெண்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், ராம்நாத் நகர், கொத்தூர், பேடரப்பள்ளி மற்றும் தர்மபுரி மாவட்டம் தளி அருகில் உள்ள பின்னமங்கலம் பகுதியில் வசித்த கூலித் தொழிலாளர்கள் கர்நாடகத்தில் இருந்து விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்தனர். இதில் 51 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் கண் பார்வை இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல் கர்நாடகத்தில் 120 பேர் வரை இறந்துள்ளனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தில் சாராய சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த விவகாரத்தில் அரசு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறியதாக தளி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், அங்கு கூடுதல் பொறுப்பு வகித்த அஞ்செட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், தளி எஸ்.ஐ. கபிலன், ஏட்டு ரவி, மதுவிலக்கு பிரிவு எஸ்.ஐ. செந்தாமரை ஆகிய 4 பேரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதியும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications