26ம் தேதி எஸ்எஸ்எல்சி முடிவுகள்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற 26ம் தேதி வெளியிடப்படக் கூடும் எனத் தெரிகிறது.
சமீபத்தில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து மதிப்பெண்களைப் பட்டியலிடும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று தெரிகிறது.
இதையடுத்து வருகிற 26ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இந்த வாரத்திற்குள் தேர்வு முடிவுகள் வெளியாகும் சாத்தியம் இல்லை என்று தேர்வுத் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. எனவே அடுத்த வாரத் தொடக்கத்தில் அதாவது 26ம் தேதியன்று முடிவுகள் வெளியிடப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications