சென்னையில் தொடரும் பகலில் வெயில் - மாலையில் மழை
சென்னை: சென்னையில் நேற்றும் பகலில் கடும் வெயில், மாலையில் பலத்த காற்றுடன் மழை காணப்பட்டது.
அக்னி நட்சத்திரம் முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ளது. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் அடித்து வரும் கடும் வெயில் வேகம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நல்ல மழையும் பெய்து மக்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்து வருகிறது.
தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிகபட்ச வெயில் பதிவாகி வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பகலில் கடும் வெயில், மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை என்ற வினோத நிலை காணப்படுகிறது.
பகல் முழுவதும் நல்ல வெயில் அடித்து விட்டு, மாலையில் அப்படிேய நிலைமை மாறி விடுகிறது. பலத்த சூறைக் காற்றுடன், கன மழை பெய்கிறது. இருப்பினும் மழை நகர் முழுவதும் இருப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்ற ரேஞ்சில் மழை பெய்து வருகிறது. அதேசமயம் நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் இரவில் புழுக்கம் குறைந்து வெட்கை தணிந்து விடுகிறது.
சென்னையில் நேற்று நுங்கம்பாக்கத்தில் 103 டிகிரியாகவும், மீனம்பாக்கத்தில் 104 டிகிரியாகவும் வெயில் அடித்தது. இன்றும் பகலில் நல்ல வெயில், மாலையில் காற்றுடன் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடியப் போவதால் இனிமேல் வெயிலின் தாக்கமும் படிப்படியாக குறையும், மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.