For Quick Alerts
For Daily Alerts
Just In
கர்நாடகா: சிக்குன் குனியாவால் 57 பேர் பாதிப்பு
மைசூர்: கர்நாடகாவில் குடகு பகுதியில் பரவிவரும் சிக்குன் குன்யா காய்ச்சலால் 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் கர்நாடகாவில் குடகு பகுதியில் சம்பஜே, செம்பு, பெராஜே, குதிரெபையா, தேவரகொள்ளி ஆகிய கிராமங்களில் 32 பேரும், எள்ளுகொச்சி, சேத்துகாயா, சம்பேரி கிராமங்களில் 25 பேரும் கடுமையான சிக்குன் குன்யா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் ரத்தப் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆங்கில மருத்துவத்துக்கு இந்த காய்ச்சல் கட்டுப்படாது என்பதால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சிகிச்சைக்காக அரசு ஆயுர்வேத மருத்துவர்களை மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட கிராமங்கள் கேரள எல்லையில் அமைந்திருப்பதால் அங்கிருந்து இந்த காய்ச்சல் பரவியிருக்கலாம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments
Story first published: Friday, May 23, 2008, 16:41 [IST]