திருச்சியில்163 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நடந்த கள்ளச்சாராய வேட்டையில், 163 கள்ளச்சாராய வியாபாரிகள் பிடிபட்டனர். 2855 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
கர்நாடக, தமிழக எல்லையில் நடந்த கள்ளச்சாராய சாவுகள் தமிழகத்தில் கள்ளச்சாராயத்திற்கு எதிரான வேட்டையை முடுக்கி விட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராய வேட்டை நடத்தப்பட்டது. இதில் 54 பெண்கள் உள்பட 163 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
2855 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. 600 லிட்டர் ஊறலும் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
திருச்சி ஊரகப் பகுதிகளில் உள் 28 காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications