பதவிக்காக அடித்துக்கொண்ட ஆசிரியர்கள் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: பதவி உயர்வுக்காக கோஷ்டி மோதலில் ஈடுபட்ட பள்ளி ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, குஜிலியம்பாறை, நத்தம், வேடசந்தூர் ஒன்றிய பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.

இதையயொட்டி, தலைமைஆசிரியர் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் பட்டியல் குறித்த ஆய்வினை மாவட்ட கல்வி அலுவலர் நாச்சியார் முன்னிலையில் நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த இரு ஆசிரியர் சங்கத்தி்னர் இடையே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இருதரப்பினரும் தங்களது உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டி கல்வி அதிகாரியிடம் வலியுறுத்தினர். இந்த நிலையில் திடீரென்று ஏற்பட்ட மோதலில் ஆசிரியர்கள் ஒருவரையொருவர் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஜோசப், தியாகராஜன், ஜேம்ஸ், அண்ணாதுரை உள்பட 7 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து இருதரப்பு நிர்வாகிகள் சார்பில் திண்டுக்கல் நகர காவல் நிலையத்தில் புகார் அளி்த்தனர். இதன்பேரில் ஆசிரியர்கள் அண்ணாதுரை, எட்வர்டு ஜான், வில்லியம் உள்பட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+