ரிடையர்ட் போலீஸ் அதிகாரிகளுக்கு நோ 'ஆர்டர்லி'
சென்னை: ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் போலீஸாரை (ஆர்டர்லி) திரும்பப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் பல காலமாகவே போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆர்டர்லி என்று பெயர். அதிகாரிகள் வீட்டுப் பணிகளை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
முன்பு முதல்வராக கருணாநிதி இருந்த போது திமுக ஆட்சியில் இந்த ஆர்டர்லி முறைக்கு வேட்டு வைக்கப்பட்டது. இருந்தாலும் ஆர்டர்லி முறையை வேறு ரூபத்தில் உயர் அதிகாரிகள் கடைப்பிடித்து வந்தனர்.
இந்தப் பணிகளில் பெரும்பாலும் ஆயுதப் படை போலீஸார்தான் ஈடுபடுத்தப்படுவர். பணியில் இருக்கும் அதிகாரிகள் தவிர ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளிலும் கூட ஆர்டர்லிகள் என்ற ெபயரில் கடை நிலை போலீஸார் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை நகரில் மட்டும் 600 ஆர்டர்லி போலீஸார் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு அதிகாரியின் வீட்டில் சராசரியாக 6 போலீஸார் ஆர்டர்லியாக பயன்படுத்தப்படுகின்றனர். வீட்டு வேலைகள் செய்வது, கடைகளுக்குப் போவது, கார் ஓட்டுவது உள்ளிட்ட வேலைகள் இவர்களை வைத்து வாங்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லிகளாக உள்ள போலீஸாரை உடனடியாக திரும்பப் பெற அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மாலதி பிறப்பித்துள்ளார். இதன் நகல் டிஜிபி ஜெயினுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர்கள், டிஐஜிகள், மாவட்ட எஸ்.பிக்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. அதை டிஜிபி ஜெயின் அனுப்பி வைத்துள்ளார்.
சென்னை நகரில் வசிக்கும் முன்னாள் டிஜிபிக்களின் வீடுகளில்தான் கணிசமான அளவிலான போலீஸார் ஆர்டர்லிகளாக உள்ளனர். சமீபத்தில் ஓய்வு பெற்ற டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் 2 போலீஸார் வீட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், முன்னாள் டிஜிபிக்கள் வைகுந்த், ஸ்ரீபால் ஆகியோரது வீடுகளில் போலீஸார் யாரும் வேலை பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த உத்தரவால், ஆர்டர்லிகளாக உள்ள போலீஸார் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.
-
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications