வளர்ச்சி..வளர்ச்சி..வளர்ச்சி தான் அஜென்டா-எதியூரப்பா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தின் நில வளம், நீர் வளத்தைக் காக்க பாடுபடுவோம் என பாஜக சார்பில் முதல்வராகவுள்ள அக் கட்சியின் மாநிலத் தலைவர் எதியூரப்பா கூறியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பின் நிருபர்களிடம் அவர் பேசுகையில், தென்னகத்தில் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளதன் மூலம் எங்களது தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கனவு நினைவாகியுள்ளது.

கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக இந்த அரசு தீவிரமாக பாடுபடும். மாநிலத்தின் பிற்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும்.

கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெறவும், கர்நாடகத்தின் நீர் வளம், நில வளத்தைக் காக்கவும் தீவிரமாக பாடுபடுவோம்.

அரசின் அஜென்டாவே வளர்ச்சி.. வளர்ச்சி.. வளர்ச்சி என்பதாகவே இருக்கும். பெங்களூரை உலகிலேயே மிகச் சிறந்த நகரமாக மாற்ற பாடுபடுவோம்.

மதசார்பற்ற ஜனதா தளத்தின் துரோகம், முதுகில் குத்தியது என்பது குறித்தெல்லாம் பேச நான் தயாராக இல்லை. தேர்தல் முடிந்துவிட்டது, ரிசல்ட் வந்துவிட்டது. மக்கள் எங்களுக்கு ஆட்சி நடத்த உத்தரவிட்டுள்ளனர், அதற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

மேலும் இந்தத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட சங் பரிவார் அமைப்புகளின் தொண்டர்கள், தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+