பஹ்ரைன் போலீஸ் அராஜகம்-இந்திய பெண் கைது-கணவர் பரிதவிப்பு!
துபாய்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி இந்தியப் பெண் ஒருவரை பஹ்ரைன் போலீஸார் கைது செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார்.
பஹ்ரைனில் உள்ள இரு ஹோட்டல்களில் அந்நாட்டு போலீஸார் நேற்று விபச்சார வேட்டையை நடத்தினர். அப்போது 66 பெண்களை விபச்சாரம் செய்ததாக கூறி கைது செய்தனர்.
இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அடங்குவார். ஆனால் இவர் தனது கணவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தவர் ஆவார். ஹோட்டலின் ரெஸ்டாரென்ட்டில் அமர்ந்து கணவருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு நுழைந்த போலீஸார், அப்பெண்ணை கட்டாயப்படுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாமல் திகைத்து நின்றார். ஹோட்டல் ஊழியர்களும் போலீஸாரிடம் சென்று, அப்பெண் அப்பாவி, அவரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினர். ஆனால் போலீஸார் அதைப் பொருட்படுத்தாமல் அப்பெண்ணை அங்கிருந்து இழுத்துச் சென்று விட்டனர்.
இதுகுறித்து அந்த ஹோட்டலின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், இது மிகவும் மோசமான சம்பவம். சம்பந்தப்பட்ட பெண் தனது கணவருடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் போலீஸார் அப்பெண்ணை இழுத்துச் சென்று விட்டனர்.
ஹோட்டலுக்கு வரும் பெண்கள் அனைவரும் விபச்சாரம் செய்யத்தான் வருவார்களா?. போலீஸாரின் செயல் கண்டனத்துக்குரியது என்றார்.
பஹ்ரைன் போலீஸாரின் இந்த செயல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications