ஜோசியத்தை நம்பியதால் தோற்றது காங்-வீரமணி
சென்னை: ஜோதிடர் கூறியதை நம்பியதால் காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2004ம் ஆண்டில் பெற்றதை விட கூடுதலாக 15 இடங்களை காங்கிரஸ் பெற்றுள்ள போதிலும், பாஜகவை விட அதிக இடங்களைப் பெறத் தவறி விட்டது. இதனால் கர்நாடக ஆட்சிப் பீடத்தில் காவிக் கறை ஏற வழி வகுத்து விட்டது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தேவெ கெளடா குடும்பத்தினருக்கு எதிராக பெண்களை நிறுத்தினால் வெற்றி பெற்று விடலாம் என ஜோதிடர்கள் கணித்ததை காங்கிரஸ் கட்சி ஏற்றது.
அதன்படியே கெளடாவின் மகன் குமாரசாமிக்கு எதிராக ராமகிருஷ்ண ஹெக்டேவின் மகளையும், இன்னொரு மகன் ரேவண்ணாவுக்கு எதிராக இன்னொரு பெண் வேட்பாளரையும் நிறுத்தினர். ஆனால் காங்கிரஸ் பெண் வேட்பாளர்கள் எளிதில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்.
அரசியல் கொள்கைகளை செயல்படுத்தவும், மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தொண்டால் சிறந்தவர்களையும் தேர்வு செய்வதை விடுத்து, ஆல மரத்தடி ஜோதிடர்களை காங்கிரஸ் நம்பியதே அது மீண்டும் அரியணை ஏறாததற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் வீரமணி.












Click it and Unblock the Notifications