கேரளாவில் நல்ல மழை-ஓரிரு நாட்களில் பருவ மழை
திருவனந்தபுரம்: தென் மேற்குப் பருவ மழையின் அறிகுறி கேரளாவில் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. ஓரிரு நாட்களில் பருவ மழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய பருவ மழைகளில் ஒன்று தென் மேற்குப் பருவ மழை. ஜூன் 1ம் தேதி தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே மே 28ம் தேதியே தொடங்கும் என ஏற்னவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இது பருவ மழையின் அறிகுறியே என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை முழு வீச்சில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதாகவும், ஓரிரு நாட்களில் பருவ மழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் ெதரிவித்துள்ளது.
கேரளாவை ஒட்டியுள்ள லட்சத்தீவிலும் லேசான மழை பெய்துள்ளது.
புனலூரில் அதிகபட்சமாக 60 மில்லி மீட்டர் மழையும், ஆலப்புழாவில் 20 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.
அடுத்த 48 மணி நேரங்களில் கேரளா மற்றும் லட்சத்தீவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழையால் கேரளாவையொட்டியுள்ள கோவை, கன்னியாகுமரி, நெல்லை, தேனி மாவட்டங்களிலும் நல்ல மழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.