தயாராகிறது தென் மாவட்ட ரவுடிகள் பட்டியல்!
தூத்துக்குடி: தென்மாவட்டங்களி்ல் ரவுடிகள் கொட்டத்தை ஒடுக்க தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி ரவுடிகள் பட்டியலை போலீசார் தயாரிக்கின்றனர்.
தென்மாவட்ட சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கூடுதல் டிஜிபி விஜயகுமார் வந்திருந்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன், எஸ்பிக்கள் தினகரன், தீபக் டமோர், சந்தோஷ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தென் மாவட்ட சட்டம்-ஒழுங்கு நிலவரம், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனைகளை விஜயகுமார் வழங்கினார்.
மேலும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு 3 மாவட்ட முக்கிய ரவுடிகளின் பட்டியலைத் தயார் செய்யும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications