பஞ்சாபிலிருந்து 10000 டன் கோதுமை தமிழகம் வருகை

பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனிடமிருந்து இந்த கோதுமை இறக்குமதி செயய்ப்படும். இதுகுறித்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்ைககளை எடுத்து வருகிறது.
அதில் ஒரு சிறப்புத் திட்டமாக, பஞ்சாப் சிவில் சப்ளைஸ் கழகத்திடமிருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் டன் கோதுமையை நேரடியாக இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்.
இந்த கோதுமையை வாங்கி தமிழகத்தில் உள்ள ஆலைகளில் கொடுத்து மைதா மற்றும் ரவையாக மாற்றி ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும்.
சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் கோதுமை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியதால் நேரடியாக கோதுமையை வாங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
விலையேற்றத்தைக் குறைக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில், ரவை, மைதா ஆகியவற்றை மாநில அரசு வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார் வேலு.












Click it and Unblock the Notifications