வரதட்சணை- பெண்ணை உயிரோடு எரிக்க முயற்சி!
அறந்தாங்கி: வரதட்சணை கேட்டு பெண்ணை உயிரோடு எரிக்க முயற்சி நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது நாகுடி சீனமங்கலம். இந்த ஊரைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் (32)- தேவி (31).
இவர்களுக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகின்றன. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த சில வருடங்களாகவே தேவியிடம் வீட்டில் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி கணவர் ராஜேந்திரன், அவரது அண்ணன் முத்துராமலிங்கம் ஆகியோர் துன்புறுத்தி வந்துள்ளனர்.
அவர் மறுக்கவே ராஜேந்திரனும், முத்துராமலிங்கமும் சேர்ந்து தேவியை அடித்து உதைத்ததோடு, உயிரோடு எரிக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது.
அவர்களிடமிருந்து தப்பியோடிய தேவி போலீசில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் அந்த இருவரையும கைது செய்யவில்லை.












Click it and Unblock the Notifications