எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு
சென்னை: எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
தமிழகத்தில் 8.6 லட்சம் மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியுள்ளனர்.
மெட்ரிக்குலேஷன் தேர்வை 1.06 லட்சம் பேரும், ஓ.எஸ்.எல்.சி. தேர்வை 1.20 லட்சம் பேரும், ஆங்கிலோ-இந்தியன் தேர்வை 4,595 பேரும் எழுதினர்.
இந் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்டது. இம்முறை வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி விடைத் தாள்கள் எரிந்து போனதால் முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டை விட ஒருநாள் முன்னதாக தேர்வு முடிவு வெளியாகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலை டி.பி.ஐ. வளாகத்தில் அமைந்துள்ள மாநில அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நாளை காலை 9 மணியளவில் தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவை தட்ஸ்தமிழ் உடனுக்குடன் வெளியிடவுள்ளது.
முடிவுகளைக் காண: http://results1.oneindia.in/












Click it and Unblock the Notifications