புலிகள் கடும் தாக்குதல்: கடற்படைத் தளம் அழிப்பு-35 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: யாழ்ப்பாணம் அருகே சிறுதீவு என்ற பகுதியில் நடந்த கடும் சண்டையில் 35 பேர் பலியானார்கள். இலங்கை கடற்படையின் படைத் தளம் அழிக்கப்பட்டது.
சிறு தீவு பகுதியில் நேற்று திடீரென விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத இலங்கை கடற்படையினர் எதிர்த் தாக்குதல் நடத்த முடியாமல் திணறினர். இரு தரப்புக்கும் இடைேய நடந்த கடும் சண்டையில், அங்குள்ள இலங்கை கடற்படைத் தளம் முற்றலும் அழிக்கபப்ட்டது.
கடற்படையிருக்கு ஆதரவாக ராணுவமும், விமானப்படையும் தாக்குதலில் ஈடுபட்டன. இதில் 20 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். இலங்கைத் தரப்பில் 5 பேர் பலியானார்கள். யாழ்ப்பாணம் நகருக்குள்ளும் இந்த சண்டை பரவியது. மொத்தமாக 35 பேர் இந்த மோதலில் உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications