பொறியியல் கல்லூரி விண்ணப்பம்-நாளை கடைசி நாள்
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் சேர நேற்று வரை 1.15 லட்சம் மாணவ-மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர்.
தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் கடந்த 10ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க நாளை (31ம் தேதி) கடைசி நாளாகும். நேற்று வரை தமிழகம் முழுவதும் மொத்தம் 1.15 லட்சம் மாணவ-மாணவிகள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி 6 அரசு பொறியியல் கல்லூரிகளில் 1,900 இடங்களும், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,130 இடங்களும், 263 தனியார் கல்லூரிகளில் 1,04,814 இடங்களும் இருந்தன.
இந்த ஆண்டு புதிதாக 6 அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் மேலும் 1,500 இடங்கள் உருவாகவுள்ளன.
அதே போல அண்ணா பல்கலைக்கழகத்திலும் கூடுதலாக 360 இடங்கள் உருவாகவுள்ளன.
இதனால் விண்ணபிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சீட் கிடைத்து விடும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications