For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையின் புறநகர்ப் பகுதியான வாஷியில், ஐபிஎல் டுவென்டி 20 இறுதிப் போட்டி நடைபெறவுள்ள ஸ்டேடியம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.

மும்பை வாஷி பகுதியில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நவி மும்பையில் விஷ்ணுதாஸ் பவே தியேட்டர் உள்ளது. இங்கு நேற்று இரவு நாடகம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இடைவெளையின்போது, தியேட்டர் வளாகத்தில் ஒரு பை கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அந்தப் பையை மீட்டனர். அதை சோதித்து பார்த்தபோது அதில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது.

உடனடியாக அந்த வெடிகுண்டை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று அது செயலிழக்க வைக்கப்பட்டது.

இந்த இடத்திற்கு அருகில்தான் வாஷி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ளது. இந்த நிலையில் வெடிகுண்டு சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு சிக்கியதால், போட்டி ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அது நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X